Thursday, January 24, 2008

மரணமில்லா வாழ்க்கைக்கு வழி














(இதை படிக்கும் முன் தயவு செய்து www.victoryondeath.blogspot.com உள்ள இதன் முந்தய பகுதியை படிக்கவும்)

வரைபட விளக்கம்:

இந்த வரைபடம் மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள உறவை விளக்குவது ஆகும்.

இறைவன் உண்டாக்கி ஏதேன் தோட்டத்தில் வைத்த முதல் மனிதன் பாவம் செய்து தேவனை விட்டு பின்வாங்கி போனான். ஒரு நிலையில் மனிதனின் அக்கிரமம் பொறுக்க முடியாமல் இறைவன் உலகத்தை ஜலத்தின் மூலம் அழித்தார். அழிவில் இருந்து தப்பிய நோவா என்ற நீதிமானின் சந்ததியில் இருந்து வந்த ஆபிரகாமை இறைவன் அழைத்து வழி நடத்தி அவர் சந்ததியில் இயேசு என்னும் இரட்ச்சகரை எழுப்பி எல்லா மனிதனின் மொத்த பாவத்துக்க்காகவும் சிலுவையில் அவரை மரிக்கும்படி செய்தார்.
.
இயேசுவின் மரணத்தின் மூலம் ஒரு மனிதன் எந்த நிலையிலும் (அதாவது மிக கொடூரமான பாவம் செய்திருந்தால் கூட) தேவனுடன் ஒப்புரவாகி பரலோக ராஜ்யம் போக முடியும்.
.
இயேசுவை ஏற்றுக்கொண்ட மனம்திரும்பி இரட்சிக்கப்பட்ட யாவரும் கடந்த காலத்தில், அந்த நாள் வரை செய்த எல்லா பாவங்களும் கழுவப்பட்டு இரட்சிப்பு என்னும் ஒரு சந்திப்பை வந்து அடைகின்றனர். அங்கிருந்து வழி இரண்டாக பிரிகிறது
.
வழி 1. மிக சமீபமாக இருக்கும் பரலோக ராஜ்யம் போகும் வழி

இங்கு போக வேண்டுமென்றல் மனிதன் தன் மாமிசத்தில் மரித்தே ஆகவேண்டும். இங்கு போவதன் மூலம் போகும் அந்த நபர் ஒருவரே நரக அக்கினியில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் இங்கு ஒருவர் போவதினால் சாத்தானுக்கோ அவன் ராஜ்யத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது தான் இன்றைய கிறிஸ்தவத்தின் வழி. அதை பற்றி விளக்க அனேக கிறிஸ்தவ அமைப்புகள், ஊழியர்கள் உள்ளனர்.
.
வழி 2. மிக தூரத்தில் இருக்கும் ஏதேன் தோட்டம் போகும் வழி
இது ஜீவ விருட்சம் உள்ள ஏதேன் தோட்டத்துக்கு வந்த பாதையிலே திரும்பி போகும் வழி. இது ஒரு கடினமான நீண்ட வழி. இங்கு ஒரு மனிதன் போய் சேர்ந்துவிட்டால் அவன் மரணமில்லா வாழ்க்கையை அடைவதோடு மொத்த மனித கூட்டத்தையும் நரக அக்கினியில் இருந்து மீட்டுவிட முடியும். அதாவது வேரோடு மொத்த மனித கூட்டத்தையும் நரக அக்கினியில் இருந்து பாதுகாக்க முடியும். ஏனெனில் எல்லாமே ஒரே மனிதனால் தான் வந்தது அதுபோல் எல்லாமே ஒரே மனிதனால்தான் முடியும்.
.

இயேசு மனிதனாக வந்தாலும் அவர் மனித வித்தினால் பிறக்கவில்லை அவர் இறைவனின் வித்து அகவே அவர் நமக்கு சரியான பாதையை காட்டி உதவி செய்யத்தான் முடியுமே அன்றி வேறொன்றும் செய்ய முடியாது. "வானத்திலும் பூமியிலும் அவருக்கு சகல அதிகாரமும் உள்ளது" அவரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பாவத்தில் மரித்து நரகத்துக்கு போகும் மனிதனை தடுத்து நிறுத்த அவரால் முடியாது.
.

மேலும் இறைவனும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டார்.
தன் சொந்த குமாரனையே நமக்காக கொடுத்துவிட்டார் அவரும் தன் கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக சிந்தி விட்டார். இனி நாம் தான் ஆதாமின் இடம் வரை போய் மனித வர்க்கத்தை மீட்க வேண்டும். சிலுவையில் இயேசு எல்லாம் முடிந்தது என்று சொன்னதன் காரணம் தேவன் தனது பக்கம் இருந்து செய்ய வேண்டிய எல்லாம் முடிந்துவிட்டது என்பதைத்தான் சொல்கிறதே அல்லாமல் இன்றைய கிறிஸ்தவர்கள் சொல்வதுபோல் நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் அவர் செய்துவிட்டார் நாம் ஒன்றும் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதை குறிப்பதர்க்காக அல்ல. அப்படி அவரால் நமக்கும் சேர்த்து எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியுமானால் இவ்வளவு பெரிய பைபிள் எதற்கு திரும்ப திரும்ப என் வார்த்தையை கை கொள்ளுங்கள் என்று ஏன் அவர் நம்மை பார்த்து சொல்லவேண்டும். இயேசுவின் மேல் உள்ள விசுவாசம் மட்டும் போதுமென்றால் வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் ஒவ்வொரு சபைக்கும் ஆவியானவர் எழுதும் போது "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் " என்ற வார்த்தையை மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறாரே அது ஏன்? மேலும் "ஆதியில் கொண்ட அன்பை விடுவது குற்றம்" என்றும் "ஜீவ புஸ்தகத்தில் எழுதிய பெயரை கூட கிருக்க்கிபோட முடியும்" என்று அங்கு சொல்லப்படடிருக்கிறதே! அன்பானவர்களே கிரியை இல்லாத விசுவாசம் செத்தது அதனால் எந்த பயனும் இல்லை.
.
நமது பசிக்கு இன்னொருவர் சாப்பிட முடியுமா?

"நாம் செய்த தவறுக்கு வேண்டுமானால் இன்னொருவர் தண்டனை அனுபவிக்க முடியும் அனால் நமது பசிக்கு இன்னொருவர் சாப்பிட முடியாது" அதுபோல எல்லோருடைய பாவங்களுக்கும் சேர்த்து இயேசு இரத்தம் சிந்திவிட்டார். அவர் இரத்தமேயன்றி நமக்கு பாவமன்னிப்பு இல்லை ஆனால் அதை பயன்படுத்தி பரலோகம் பொய் சேர்வது எப்படி நமது விசுவாசத்தில் உள்ளதோ அதுபோல மொத்த மனித கூட்டத்தையும் நரக அக்கினியில் இருந்து மீட்பது நமது கிரியையில் தான் உள்ளது இது ஏன் அனேகருக்கு புரிவதில்லை என்று தெரியவில்லை. ஆகவேதான் அவர் கிரியைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.


இரண்டு வழிகளும் இயேசுவின் இரண்டு கற்பனைகளும்.
மேற்சொன்ன இரண்டு வழிகளும் இயேசுவின் இரண்டு பிரதான கற்பனைகளாக உள்ளது அவைகள்:

உன் தேவனாகிய கர்த்தர் மீது முழு இருதயத்தொடும் முழு ஆத்துமாவோடும் அன்பு செலுத்துவாயாக


உன்னிடத்தில் நீ அன்பு கூறுவதுபோல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக .

இந்த இரண்டு கற்பனையையும் சுருக்கமாக சொன்னால்:

முழு கீழ்படிதல் - கர்த்தரிடத்தில் அன்பாக இருப்பது (அன்பாக இருப்பவன் அவர் கட்டளைகளை கைகொள்வான்) உதாரணம் - ஆபிரகாம் ஈசாக்கை பலியிட சென்றது)

முழு இரக்கம் எனப்படும் மனதுருக்கம் - தன்னை போல பிறரை நேசிப்பது. உதாரணம் - இயேசு ஒருவரே

இதில் வேதபாரகரும் பரிசேயரும் வேதவார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்தார்கள் ஆனால் இரக்கத்தை விட்டுவிட்டார்கள்.

இன்றைய அனேக கிறிஸ்தவர்களிடம் முழுமையான இரக்கப்படுதலும் இல்லை முழுமையான கீழ்படித்தலும் இல்லை.


மேற்சொன்ன இரண்டு வழியில் எதில் நடக்க வேண்டுமென்றாலும் அது மனிதனின் சொந்த பலத்தினால் முடியாத ஒரு செயல். அகவேதான் பரிசுத்த ஆவி என்னும் ஒரு கூடுதல் பெலனை இயேசுவின் மரணம் மூலம் இறைவன் நமக்கு அருளியுள்ளார். அந்த ஆவியின் துணையுடன் விசுவாசத்தில் முழு பிரதிஷ்ட்டையோடு நடந்தால் கண்டிப்பாக மரணத்தை ஜெயிக்க முடியும் இந்த வழியை பற்றித்தான் நான் விளக்கம் கொடுக்க போகிறேன்.
.
ஜீவ விருட்ச்த்துக்கான பாதை:

நாம் இப்பொழுது எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசி புத்தகத்துக்கு வருவோம். இது 48 அதிகாரம் உள்ள பெரிய புத்தகம். இதில் உள்ள எல்லா வார்த்தைகளுமே கர்த்தரால் நேரடியாக மனிதனுக்கு சொல்லப்பட்டது அல்லது வெளிப்படுத்தப்பட்டது. அதில் 18ஆம் அதிகாரத்தில் 5ஆம் வசனத்திலிருந்து நாம் இப்பொழுது பார்க்கலாம். அங்குதான் ஜீவ விருட்ச்த்துக்கான பாதை இருக்கிறது அதாவது சாகவே சாவாய் என்ற சாபத்தின் எதிர் சொல்லாகிய பிழைக்கவே பிழைப்பாய் என்ற ஜீவன் உள்ளது.
.
யார் பிழைக்கவே பிழைப்பார்? - நீதிமான் பிழைக்கவே பிழைப்பான்
.
யார் அந்த நீதிமான்? கீழ்கண்ட 18 காரியங்களை கைகொண்டு நடபபவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று (நான் அல்ல) கர்த்தர் சொல்லுகிறார்.

  1. ஒருவன் நீதிமானாயிருந்து

  2. நியாயத்தையும் நீதியையும் செய்து

  3. மலைகளின் மேல் சாப்பிடாமலும்

  4. இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை எறேடுக்காமலும்

  5. தன் அயலானுடைய மனைவியை தீட்டுபடுத்தாமலும்

  6. தூரஸ்திரியோடே சேராமலும்

  7. ஒருவனையும் ஒடுக்காமலும்

  8. கொள்ளையிடாமலும் இருந்து

  9. கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திரும்ப கொடுத்து

  10. தன் அப்பத்தை பசித்தவனுக்கு பங்கிட்டு

  11. வஸ்த்திரம் இல்லாதவனுக்கு வஸ்த்திரம் தரிப்பித்து

  12. வட்டிக்கு கொடாமலும்

  13. பொலிசை வாங்காமலும்

  14. அநியாயத்துக்கு தன் கைகளை விலக்கி

  15. மனிதனுக்குள்ள வழக்கை உண்மையாய் தீர்த்து

  16. என் கட்டளைகளின் படி நடந்து

  17. என் நியாயங்களை கை கொண்டு

  18. உண்மையாயிருப்பனாகில்
அவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.


மேற்சொன்ன இந்த 18 காரியங்களும் படிப்பதற்கு மிக சுலபமாக தெரியலாம் ஆனால் அதை கைக்கொள்ள ஆரம்பிக்கும்போதுதான் ஒவ்வொரு கட்டளையின் கடைசி ஆழம் வரை இறைவன் புதுபுது வெளிப்பாடுகளை கொடுத்துக்கொண்டே இருப்பார். இப்பொழுது கர்த்தர் சொன்ன அந்த 18 காரியங்களையும் கொஞ்சம் விபரமாக பார்ப்போம்.





Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.