வட்டிக்கு கொடாமலும்:
வட்டிக்கு கொடாமலும்:
எக்காரணத்தை கொண்டும் பணத்தை வட்டிக்கு கொடுக்க கூடாது. எந்த வழியில் வட்டிக்கு கொடுத்தாலும் அது இதில் அடங்கும். வங்கியில் சேமிப்பு கணக்கில் பணம் போடுவது மட்டுமல்ல ப பி பணம் போடுவது வரை எல்லாமே இதில் அடங்கும்.
இன்று உலகில் அனேகாரால் பின்பற்ற முடியாத கட்டளை இது என்று சொல்ல முடியும். ஏனெனில் அரசாங்கமே P R, NSC போன்ற திட்டங்கள் மூலம் அநேகரை வட்டி என்ற வலைக்குள் இழுக்கிறது. ஆனால் முயன்றால் முடியாதது அல்ல.
இதைப்பற்றி கர்த்தர் எனக்கு உணர்த்திய போது எனது பழைய PF பணம் எல்லாவற்றையும் அப்ளை பண்ணி வாங்கிவிட்டு P F பிடிக்கும் கம்பனியில் வேலை பாக்க கூடாது என்று பல பெரிய கம்பனி வேலைகளை கூட வேண்டாம் என்று நான் விட்டிருக்கிறேன். வங்கியில் சேமிப்பு கணக்கை குளோஸ் பண்ணிவிட்டேன்.
கர்த்தர் வார்த்தைக்கு கீழ்படிய வேண்டும் என்ற மன உறுதி மட்டும் போதும் எல்லாமே செய்ய முடியும். எனவே கர்த்தரின் கட்டளைபடி வட்டிக்கு கொடுப்பதை நிருத்துவோமாக.