Monday, March 31, 2008

கொள்ளையிடாமலும் இருந்து

கொள்ளையிடாமலும் இருந்து: -
கொள்ளை இடக்கூடாது என்பது வங்கி கொள்ளை போன்ற மிகப்பெரிய கொள்ளயிலிருந்து சாதரண அலுவலக பென்சில் திருட்டு வரை எல்லாவற்றையும் குறிக்கிறது.

பிறர் பொருளை அவர்கள் அனுமதி இல்லாமல் அபகரிப்பது, உபயோகிப்பது மேலும் வியாபாரத்தில் அதிகள் லாபம் வைத்து விற்பது, நிறுவையில் ஏமாற்றுவது, பிறரை ஏமாற்றி சம்பாதிப்பது, உள்தரகு வைத்து செயல்படுவது போன்றவை இதில் அடங்கும்.

அநேகர் பெரிய அளவில் திருட்டு செய்வதில்லை என்றாலும் சில்லறை காரியங்களில் கொள்ளை அடித்து சம்பாதிக்கின்றனர். அலுவலகத்தில் உள்ள பொருட்களை வீடு உபயோகத்திற்கு கொண்டு வருவது, வேலை பார்க்கும் தொழிற்சாலையில் உள்ள பொருட்களை தெரியாமல் எடுத்து வந்து விற்பது, தான் உண்மையாக செலவழித்த பணத்தைவிட அதிகம் கிளைம் பண்ணுவது, பொய் சர்டிபிகேட் கொடுத்து பணம் க்ளைம் பண்ணுவது போன்றவை இன்று உலகில் சகஜமாக உள்ளது. ஏன் தெரு பெருக்க கொடுக்கும் துடைப்பான் மற்றும் பிளீச்சிங் பவுடர் கூட விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

அவனவன் அவனவன் தகுதிக்கு தகுந்தாற்போல் கொள்ளை அடித்து சம்பாதிக்கின்றனர். ஏன் என்று கேட்டால் சம்பளம் காணாது, இப்படி பிழைத்தால் தான் வாழ முடியும் என்று எதாவது சாக்கு சொல்கிறார்கள்.

கொஞ்சத்தில் உண்மையை உள்ளவனை தான் இறைவன் அநேகத்துக்கு அதிபதியாக மாற்ற முடியும். தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட சின்ன காரியத்தில் உண்மை இல்லாதவனை எந்த எஜமான் உயர்த்துவான்? சன்று யோசித்து பாருங்கள். அகவே நீங்கள் உயர்த்தப்பட வேண்டுமென்றால் கொள்ளையிடககூடாது என்று கார்த்தர் கட்டளை இட்டுள்ளார்.

ஒருவனையும் ஒடுக்கமலும்

ஒருவனையும் ஒடுக்கமலும்:-


இந்த உலகில் மேல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழே உள்ள ஆத்துமாக்களை ஒடுக்குவது என்பது சகஜமாக உள்ளது. அதோடு அல்லாமல் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதுதான் மேல் அதிகாரிக்கு மதிப்பு என்பது போலவும் ஒரு நிலை உள்ளது.

"சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மட்டர் என்பது போல" மேலதிகாரியே ஒருவேளை சாந்தமாக நடந்து கொண்டாலும் அவர்களுக்கு கையாளாக இருப்பவர்கள் தன்னை நாடி வருபவரிடம் கடுமையாக நடந்து கொள்வதை அனேக இடங்களில் காண முடியும்.

நம்மிடம் ஒருவன் சாந்தமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், தனக்கு கீழ் உள்ள மனிதர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? ஒருவர் நம்மை திட்டி விட்டால் அந்த கோபத்தை அவரிடம் திரும்ப கட்ட முடியாவிட்டால் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் அதை அப்படியே வெளிப்படுத்துகிறோம். அது தவறு

ஒருவனையும் ஒடுக்ககூடாது என்ற இறைவனின் கட்டளை "தன் அதிகாரத்துக்கு உட்பட்ட தனக்கு கீழ் உள்ள யாரையும் கடினமாக நடத்தாமல் அன்பாக சாந்தமாக நல் வார்த்தைகள் மூலம் நடத்த வேண்டும் என்பதை குறிக்கிறது. அவனும் நம்மை போல மனிதன் தானே!

பணக்கரனையும் தனக்கு மேல் அதிகாரத்தில் உள்ளவனையும் பார்த்து நடுங்கும் நாம் ஏழைகளையும் தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் கண்டு கொள்வதே இல்லை. அவர்கள் வார்த்தைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதி இல்லை.

"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பிறக்கும் போது ஒரு சாதரண தச்சர் குடும்பத்தில் மாட்டு தொழுவத்தில் தான் பிறந்தார்" அவர் நினைத்தால் ராஜாக்களின் வீட்டில் பிறந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும் ஆனாலும் அப்படி பிறக்காமல் ஏழையாக பிறந்ததன் மூலம் நாம் ஏழையை மதிக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவி செய்யவிட்டலும் பரவாயில்லை அவர்களை ஒடுக்குவது மிக மிக தவறு.

தூர ஸ்திரியோடே சேராமலும்:-

தூர ஸ்திரியோடே சேராமலும்:-

"ஸ்திரியானவள் தன் உடலில் உண்டாகும் உத்திர உறலின் நிமித்தம் 7 நாட்கள் தன் விலக்கத்தில் இருகககடவள்" என்று உபாகமம் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

தூர ஸ்திரியின் தீட்டு என்பது கர்த்தருக்கு மிகவும் அருவருப்பானது என்பதை வேதம் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மாமிசம் சம்பந்தப்பட்ட எல்லா தீட்டுக்கும் மரித்திருந்தாலும் இயேசுவின் வழிபடி வாழ்பவர் எல்லோரும் மரிக்கத்தான் வேண்டியுள்ளது.
ஆனால் ஒருவன் "பிழைக்கவே பிழைப்பாய்" என்ற வார்த்தையை சுதந்தரிக்க வேண்டுமென்றல், ஸ்திரியானவள் விலக்காய் இருக்கும் போது 7 நாட்கள் அவளுடன் சேரக்கூடாது. அப்படி சேர்ந்தால் அவனும் தீட்டகிறான் எனவே ஸ்திரியனவள் சூதகத்தல் விலக்காய் இருக்கும் போது அவளோடு சயனிக்கும்படி சேரக்கூடாது.

இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுக்காமலும்

4. இஸ்ரவேல் தேசத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுக்காமலும்:-

பைபிள் எழுதப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை இஸ்ரவேல் மக்கள் பல்வேறு விக்கிரகங்களை வணங்கி வருவதை நாம் கான முடியும். "பாகால்" "வானராங்கி" "தாகோன்" மற்றும் சூரியன் போன்றவற்றுக்கு விக்கிரகங்களை உண்டாக்கி இஸ்ரவேல் மக்கள் வணங்கி வந்துள்ளனர். அவற்றுக்கு நேராக தன் கண்களைக்கூட ஏறெடுக்க்கக்கூடாது என இறைவன் கட்டளை இட்டுள்ளார். இது மட்டுமல்ல

"மாதா சிலை" "குழந்தை ஏசு மன்றும் ஏசு சிலை, மிக்காவேல் சிலை போன்ற எந்த விக்கிரகங்களையும் வணங்கக்கூடாது என்பது கர்த்தரின் கட்டளையாகிய "மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உண்டாயிருக்கிரதற்கு ஒப்பான ஒரு சுரூபத்தயாவது விக்கிரத்தயாவது நீ எனக்கு உண்டாக்க வேண்டாம் அதை நமஸ்க்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்" என்பதுள் அடங்குகிறது.


கர்த்தர் விக்கிரக வழிபாட்டை மிக கடுமையாக வெறுப்பதை நாம் பரிசுத்த வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்க முடியும். இது ஏன் என்று இறைவனிடம் அமர்ந்தது விசாரித்த போது அவர் சொன்னது:-"இன்று உலகில் மந்திரவாதங்கள், பில்லி சூனியங்கள் பெருகிவிட்டது. ஒருவன் பெயரை கேட்டவுடன் அவன் ஜாதகத்தையே கணித்து சொல்லுமளவுக்கு மேதைகள் இன்று உலகில் உள்ளனர். நம்மை பற்றி இறைவனுக்கு எவ்வளவு தெரியுமோ அதே அளவுக்கு சாத்தானுக்கும் தெரியும் என்றதோடு,

பில்லி சூனியம் மந்திரம் செய்பவர்கள் ஒருவர் கும்பிடும் தெய்வம் எது என்று தெரிந்து அந்த தெய்வத்தின் படம் உருவம் போன்றவற்றை சூனியம் செய்யும் இடத்தில் வைத்து மந்திரம் செய்வதன் மூலம் அந்த தெய்வத்தாலேயே அவர்களை காப்பற்ற முடியாமல் போய்விடும். அகவேத்தான் உருவத்தை வைத்து வழிபட வேண்டாம் என்று சொன்னதோடு என் உருவத்தையும் நான் முழுமையாக யாருக்கும் இதுவரை காட்டவில்லை. என்று விளக்கினார்.

விக்கிரக வழிபாடு வேண்டாம் என்று சொன்னது நமது நான்மைக்காகதான் என்பதால் விக்கிரக வழிபாட்டை விட்டு விட வேண்டும்.


மலைகளின் மேல் சாப்பிடாமலும்:

மலைகளின் மேல் சாப்பிடாமலும்:

மலைகளின் மேல் அமர்ந்து ஆகாரம் உண்ணக்கூடாது என்று இறைவன் கட்டளை இட்டுள்ளார் அதற்கு காரணம் என்னவென்று நமக்கு சரியாக தெரியாவிட்டாலும் எதாவது மறைவான காரியங்கள் இருக்ககூடும்.

பெரும்பாலான கோவில்கள் மலைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளதாலும் அனேக சாமிகளின் இருப்பிடம் மலையாக இருப்பதாலும் கர்த்தர் இந்த கட்டளையை சொல்லி இருக்கலாம் என்று கருதுகிறேன்.

எது சரியோ கர்த்தர் சொல்லிவிட்டார் மலைகள் மேல் சாப்பிடக்கூடாது என்று, எனவே மலைகளின் மேல் அமர்ந்து சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும்.

நியாயமும் நீதியும் செய்து:

2. நியாயமும் நீதியும் செய்து:
ஒருவன் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாய் இருந்தால் மட்டும் போதாது அவன் நியாயமும் நீதியும் செய்ய வேண்டும்.

அன்பானவர்களே, நியாயம், நீதி இவை இரண்டும் இரட்டை குழந்தைகளை போன்றது. இந்த வார்த்தைகள் இல்லாத புத்தகமே வேதத்தில் இல்லை எனலாம். அவ்வளவு முறை இறைவன் நீதி நியாயத்தை பற்றி சொல்லிவிட்டார். அதாவது ஏறக்குறைய 200க்கும் மேல்பட்ட இடங்களில் நீதி நியாயம் சம்பந்தமான வார்த்தைகள் வேதத்தில் உள்ளது.

அவற்றில் பழைய உடன்படிக்கையில் இரண்டும், புதிய உடன் படிக்கையில் இரண்டு மட்டும் கீழே உள்ளது:

  • கர்த்தர் சொல்கிறார் நியாயத்தை கை கொண்டு நீதியை செய்யுங்கள் (ஏசா:56:1)
  • நியாயம் தண்ணீரைபோலவும் நீதி வற்றாத நதியை போலவும் புரண்டுவரக்கடவது (ஆமோ:5:24)
  • வேதபாரகர் பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத் 5:20)
  • நியாயம் இன்னதென்று தீர்மானிக்காமல் இருக்கிரதென்ன(லூக்: 12:57)

இவ்வளவு முக்கியமான வார்த்தைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். எந்த சபையிலாவது நீதி நியாயம் பற்றி விளக்கும் செய்திகள் கொடுக்கப்படுகிறதா? எனக்கு தெரிந்து ஒரு புத்தகம் கூட இந்த தலைப்பில் இருந்தமாதிரி தெரியவில்லை. இந்த நிலை ஏன்? தேவன் திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நாம் என்னத்தை பேசிக்கொண்டு இருக்கிறோம்?

.
இலவசமாக தேவ நீதி நமக்கு கிடைத்தது உண்மை தான். அதற்காக நான் கிடைத்த நீதியை காத்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கமாட்டேன் எந்நாளும் எங்கு இலவசமாக கிடைக்கிறதோ அதையே எதிர்பார்த்துக்கொண்டு இருப்பேன் என்பது சரியா?
.
எதோ மழை வெள்ளம் வந்ததால் அரசாங்கம் ஒரு குடும்பத்தும் 2000/- ரூபாயும் கொஞ்சம் அரிசியும் கொடுத்தால் வாழ்நாளெல்லாம் அப்படி கிடைக்கும் இலவசத்தையே எதிர்பார்த்து உழைத்து சம்பாதிக்க சோம்பேறித்தனம் படுவது போலல்லவா இன்றைய போதனைகள் இருக்கிறது.

தேவ நீதிக்கு முன் நம் நீதி ஒன்றுக்கும் உதவாததுதான் ஆனாலும் நம்மால் செய்ய முடிந்த அந்த நீதியை இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அதுதான் திரும்ப திரும்ப நீதி செய், நியாயம் செய் என்று சொல்கிறார். மாதம் 20000/-ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தகப்பனுக்கு தனது மகன் சம்பாதித்த 1000 ரூபாய் ஒன்றுமில்லைதான் அதற்காக நீ வேலைக்கே போக வேண்டாம் என்றும் எனது சம்பளத்திலேயே சாப்பிடு என்று எந்த தகப்பனும் சொல்வதில்லை. தன்னை போல தன் பிள்ளையும் வரவேண்டும் என்றுதான் எந்த தகப்பனும் எதிர்பர்ப்பான் அது போலத்தான் இறைவனும்.
.
நியாயத்துக்கும் நீதிக்கும் என்றுமே எதிர்த்து நிக்கும் சாத்தானின் தந்திரத்தால் கட்டுண்டு கிடக்கும் நமக்கு இறைவன் எத்தனை முறை கத்தினாலும் நமது காதில் அது விழுவது இல்லை

ஒவ்வொன்றையும் விளக்கமாக எழுதினால் நேரம் போதாது அகவே நீதி நியாயம் இவை இரண்டுக்கும் சில உதாரணங்களை சொல்லி இந்த டாப்பிக்கை முடித்து விடுவோம்.

"நியாயம் செய்தல்" என்ற பதத்தின் சரியான அருத்தம் என்னவெனில் "பிறரின் நியாயமான கோரிக்கைகளுக்கு எந்த விதத்திலும் பங்கம் வராமல் ஒருவன் நடந்துகொள்வது ஆகும். நமது நியாயமான கோரிக்கைகளை பிறருக்காக விட்டுக்கொடுத்தல் மற்றும் சில நேரங்களில் பிறரின் அநியாயமான செயலை கூட தாங்கிக்கொண்டு அதற்கு பதில் செய்யாமல் இருத்தல் எல்லாமே இதில் அடங்கும்.

இதற்க்கு சரியான உதாரணம் எதுவென்றால் "பருந்திடம் தப்பி வந்த புறா ஒன்று தனது மடியில் தஞ்சம் அடையவே, பருந்தில் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு புறாவின் எடைக்கு எடை தனது தொடை சதையை அறுத்துக்கொடுத்தானே சிபி சக்கரவர்த்தி" அவனை போல தனக்கு துன்பம் நட்டம் வந்தாலும் பிறர் நியாயத்தை நிலைநாட்டுதல் ஆகும்.

இறைவன் எதிர்பார்க்கும் நீதி செய்தல் என்பதற்கு சரியான உதாரணம் "தன் மகன் ஒரு கன்றை தேரை ஏற்றி கொன்றான் என்பதை கேள்விப்பட்டதும் தன் மகனையும் அதே போல் தேரை என்றி கொன்றானே மனுநீதி சோழன்" அது போன்றது. .

இப்படி புற ஜாதியார் நீதியும் நியாயமும் செய்திருக்க மகா நீதிபரரின் பிள்ளைகளாகிய நாம் அதற்கு ஒருபடி மேலே நீதி நியாயம் செய்ய வேண்டாமா?

தன் பிள்ளைய பிறர் பிள்ளையா, தன் ஜாதிய பிறர் ஜாதியா, தன் மதமா பிற மதமா என்றெல்லாம் பார்த்து நியாயத்தை புரட்டாமல் பணம், அழகு, செல்வாக்கு, போன்றவற்றுக்கு மயங்காமல் பயப்படாமல் சரியான நீதி செய்ய வேண்டும். .

"பரிசெயார் சதுரேயர் என்பவர்களின் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இராவிட்டால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டிர்கள்" என்று இயேசு சொன்னதை நினைவு கூறுங்கள்.

ஒருவன் நீதிமானாய் இருந்து

1. ஒருவன் நீதிமானாய் இருந்து:

யார் நீதிமான் என்று சொல்லும் போது, அவன் நீதிமானாக இருக்கவேண்டும் என்று என்று வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதன் அருத்தம் எனக்கு நீண்ட நாளாக புரியவில்லை. ஒருநாள் இறைவன் அதை எனக்கு வெளிப்படுத்தினார். அதாவது ஒருவன் நீதிமானாக ஆக வேண்டுமென்றால் அவன் முதன் முதலில் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாக வேண்டும். இதை தான் எசாயா தீர்க்கன் மூலம் ஆண்டவர் 53:11ல் "என் தாசனாகிய நீதிபரர் தன்னை பற்றும் அறிவினால் அநேகரை நீதிமானாக்குவார்" என கூறுகிறார். . இதை நாம் சற்று விளக்கமாக பார்ப்பது நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் இது சம்பந்தமாக பல தவறான உபதேசம் அநேகரை துணிந்து பாவம் செய்யவைக்கிறது. இயேசு என்னை நீதிமானாக்கிவிட்டார் இனி பாவம் என்னை ஒன்றும் செய்யாது என்று பலர் இறைவனின் கட்டளைகளை துணிகரமாக மீறி பாவம் செய்து தண்டனையை அனுபவித்து வருகின்றனர். நீங்கள் எந்த காலத்தில் இருந்தாலும் எவ்வளவு பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டாலும் பாவம் செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு. மனிதன் எதை விதைக்கிரானோ அதன் பலனை அறுத்தே தீருவான் ஏனென்றால் இந்த பூமியின் தன்மை அதுதான். பூமியில் விதை விதைத்தால் சில விதைகள் ஓரிரண்டு வாரங்களில் பலன் தரும், சில விதைகள் ஓரிரண்டு மதங்களில் பலன் தரும் சில விதைகள் சில வருடங்கள் கழித்தும், சில விதைகள் (பனை போன்றவை) சில தலைமுறைகள் கழித்தும் பலன் தரும். கோதுமையை விதைத்து நெல்லை அறுக்க முடியாது அதுபோல் எதை விதைக்கிறோமோ அது வட்டியும் முதலுமாக திரும்ப கிடைத்தே ஆகும். நன்மையை விதைத்தால் நன்மையும் தீமையை விதைத்தால் தீமையும் கண்டிப்பாக கிடைக்கும்.
.

அகவேதான் எரேமியா தீர்க்கன்: தன் பாவத்துக்கு வரும் தண்டனை குறித்து முறையிடுகிரதென்ன? நம் வழிகளை சோதித்து பார்த்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம் என்று புலம்பல் புஸ்தகத்தில் புலம்புகிறான்

தவறு இல்லாமல் தண்டனை இல்லை:
தவறு செய்யாத பிள்ளையை எந்த ஒரு நல்ல புத்தியுள்ள தகப்பனும் தண்டிப்பது இல்லை அல்லது பிறன் கையில் தண்டனைக்கு ஒப்பு கொடுப்பது இல்லை. இந்த உலக தகப்பனே இப்படி இருக்கும்போது, மகா நீதியுள்ள நமது பரமதகப்பன் யாரையும் தவறு இல்லாமல் தண்டிப்பதும் இல்லை சாத்தான் கையில் தண்டனைக்கு ஒப்பு கொடுப்பதும் இல்லை.
.
ஊழியர்களை பிசாசு கடினமாக தாக்குவான் என்பதெல்லாம் ஒரு தவறான உபதேசம். தான் உழைத்து சாப்பிடும் ஒரு விசுவாசியை விட, பிறரின் காணிக்கையில் வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் இறைவனிடம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். அதில் இறைவன் மிகவும் கண்டிப்பான தகப்பன் போல இருக்கிறார் அதில் ஊழியர்கள் தவறு செய்யும் போது இறைவனின் தண்டணையை பெற நேரிடுகிறதே அன்றி வேறொன்றும் இல்லை. ஆண்டவரின் அனுமதி இன்றி யாரும் நம் மேல் கை வைக்க முடியாது. அதுபோல் நம் மேல் குற்றம் இல்லாமல் இறைவன் யாரையும் நம்மை தொட அனுமதிப்பது இல்லை ஆனால் இன்றைய பாஸ்டர்கள் எதாவது நோய் நொடி விபத்து வந்து விட்டால் தான் செய்த பாவம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்து திருத்திக்கொள்ளாமல், சாத்தான் தாக்குகிறான் என சாத்தான் மேல் பழியை போட்டு தனது பாவத்தை மறைத்து விடுகின்றனர். அதைப்பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை கர்த்தருக்கு சித்தமானால் அதை பற்றி தனி கட்டுரையில் எழுதுகிறேன்.
இப்பொழுது நமது மெயின் பாயண்டை பார்ப்போம்

இயேசு நியாயபிரமாணத்தின் எந்த பகுதியை முடித்தார். . இயேசு நியாயபிரமாணத்தின் முதல் இரண்டு பகுதியாகிய கர்த்தரின் கட்டளைகளையோ கர்த்தரின் நீதி நியாயங்களையோ மாற்ற அல்லது முடிக்க வரவில்லை என முன்பே வசன ஆதாரங்களுடன் சொல்லி இருந்தேன். இப்பொழுது இயேசுவின் சிலுவை மரணத்தால் நியாயபிரமாணத்தின் அடுத்த இரண்டு பகுதியான கர்த்தரின் வாசஸ்தலம் அமைப்பது, பாவத்துக்கான பலியிடுதல் அதாவது இரத்தம் சிந்துதல் சம்பத்தப்பட்டவைகள் எப்படி முடிவடைகிறது என்பதை வசன அதாரத்தோடு பார்க்கலாம். .

தேவன் சீனாய் மலையில் தமது வாசஸ்தலம் அமைக்கும் முறை பற்றி விளக்கமாக தெரிவித்தார். மோசேயும் அதே மாதிரியில் வாசஸ்தலத்தை அமைத்து, அவர் கட்டளை இட்டபடியே ஒரு வெளி பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்னும் மூன்று பாகங்களால் ஆன வாசஸ்தலத்தை நிறுவிய போது கர்த்தரின் மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று என்று யாத்ராகமம் 48:35ல் வாசிக்கிறோம். .

அதேபோல் கர்த்தர் நிலையாக தங்கும் ஒரு ஆலயத்தை எப்படியாவது கட்டவேண்டும் என்ற தீராத வாஞ்சை தாவீது ராஜாவுக்கு இருந்தது. ஆகவே கர்த்தர் அவன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவரின் குமாரன் சாலமோன் மூலம் தனக்கு ஒரு ஆலயம் கட்டப்படும் என்று அறிவித்தார். அதன்படி ராஜாவாகிய சாலமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டி முடித்தபோது கர்த்தருடைய மகிமையாகிய மேகம் அந்த ஆலயத்தை நிரப்பிற்று என்று I இராஜாக்கள் புத்தகம் 8:10,11ல் பார்க்கலாம்.

சாலமோன் செய்த விண்ணப்பத்தை கேட்ட கர்த்தர் சாலமோனுக்கு இரண்டாம் விசை தரிசனமாகி "என் கண்களும் என் இருத்தயமும் எந்நாளும் அங்கே இருக்கும் (Iஇராஜா:9:3) என்று சொன்னாலும். அவர் சொன்ன கட்டளைகளையும், நியாயங்களையும் கை கொள்ளாவிட்டால் "இந்த ஆலயத்தை என் சமூகத்தை விட்டு தள்ளுவேன்" என்று தொடர்ந்து வரும் வசனங்களில் கூறியுள்ளார். . மேலும் கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம்,கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி பொய் வார்த்தைகளை நம்பிகொள்ளாதிருங்கள்((எரே:7:4) என்றும் சொல்வதால் அது அவர் நிலையாக தங்கும் இடமல்ல. .

நான் உங்கள் நடுவில் உலாவி உங்கள் தேவனாய் இருப்பேன் (லேவி26:12)உன்னதத்தில் வாசம் பண்ணுகிற நமது தேவனாகிய கர்த்தர் (சங்:113:5), நொறுங்குண்டு பணிந்த ஆவி உள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன் (ஏசா: 57:15) மற்றும் எருசலேமில் வாசம் பண்ணும் கர்த்தர், சீயோனில் வாசம் பண்ணும் கர்த்தர், கேரூபின்கள் மத்தியில் வாசம் பண்ணும் கர்த்தர் என்று தான் வாசம் பண்ணும் இடங்களை பற்றி பல்வேறு விதமாக சொல்லும் கர்த்தர் "வானம் எனது சிங்காசனம் பூமி எனது பாதப்படி" என்று ஏசாயா தீர்க்கன் முலம் சொல்வதால் மனிதன் கைவேலையாய் செய்யும் எதிலும் வாசம் செய்வது இல்லை (அப்:17:24).

இதிலிருந்து நாம் பழைய உடன்படிக்கை காலத்தில் கர்த்தர் தன்னை தொழுவதற்கு ஆசரிப்பு கூடாரம் மற்றும் ஆலயம் அமைக்க சொல்லியிருந்தாலும், அவர் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் இருக்க வல்லவர் என்றும், அது போல் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்க வல்லவர் அறிந்து கொள்ளலாம். ஆகவேதான் யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள கூடுமோ" என்று எரே:23:24ல் கூறுகிறார். .

நாம் புதிய உடன்படிக்கையின் காலத்துக்கு வரும்போது இயேசு கிறிஸ்து "பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும், அது இப்பொழுது வந்திருக்கிறது" என்று சொல்கிறார்.

அது எப்படி வந்தது இயேசு சிலுவையில் மரித்தபோது என்ன நடந்தது: .
தேவாலயத்தின் திறைசீலை நடுவில் இரண்டாக கிழிந்தது (லுக்:23:45) இதே வசனத்தை மத்:28:51, மாற்கு:15:38 லும் பார்க்கலாம்.

அந்த திரை சீலை தான் மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் தடுப்பு ஆகும். கர்த்தரின் கட்டளைபடி பிரதான ஆசாரியன் மட்டுமே வருடத்துக்கு ஒரு முறை அந்த திரையை கடந்து மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் போய் எல்லோருக்குமாக பாவநிவர்த்தி செய்து வருவான். அவனும் எதாவது தவறு செய்திருந்தால் அங்கேயே குளோஸ் பிறகு கயிறை கட்டித்தான் இழுக்க வேண்டி வரும். .

இப்படி யாருமே பிரவேசிக்க முடியாமல் இருந்த அந்த மகா பரிசுத்த ஸ்தலம் இயேசுவின் மரணத்தின் மூலம் திறக்கப்பட்டு யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லும் வழி பிறந்தது .
இவ்வளவு கட்டுப்பாடோடும், பரிசுத்ததோடும் காக்கப்பட்ட அந்த ஸ்தலத்துக்குள் என்ன இருந்தது தெரியுமா?

மோசே ஒரேபியிலே அந்த பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் வேறொன்றும் அதில் இல்லை (Iஇராஜா:8:9)

ஆம் அன்பானவர்களே! இறைவனின் கட்டளைகள் அதுவும் அவர் கைப்பட எழுதிகொடுத்த வார்த்தைகள் அவ்வளவு பரிசுத்தமும் என்றும் மாறாததுமாகும். அதுதான் இறைவன் மீண்டும் மீண்டும் அதாவது பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய மல்கியா கடைசி அதிகாரமாகட்டும், வெளிபடுத்தின விசேஷம் கடைசி அதிகாரமாகட்டும்
.
என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாய பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள் (மல்:4:4) ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரம் உள்ளவர்களாவதர்க்கும் வாசல் வழி நகரத்துக்குள் பிரவேசிப்பதர்க்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்பவர்கள்தான் பாக்யவாங்கள் (வெளி: 22:14)
என்று திரும்ப திரும்ப சொல்கிறார்.

நான் நிச்சயித்து சொல்லும் ஒரு காரியம் என்னவென்றால் உலகில் உள்ள ஒவொருவரும் இந்த 10 கட்டளைகளின் எதாவது ஒரு கட்டளையால் பிடிக்கப்பட்டிருப்போம் உங்கள் வாழ்க்கையை சற்று சோதித்து பாருங்களேன்.

பலியிடுதல் இரத்தம் சிந்துதல்:
(பலி என்பது எப்படி முதன் முதலில் இந்த பூமிக்குள் நுழைந்தது என்பதை இந்துக்களுக்கான வரலாறை எழுதும்போது விளக்கமாக எழுதுகிறேன்)
நமது வேதத்தில் பலி என்பது ஆதம் பாவம் செய்த பிறகு ஆரம்பமாகி உள்ளது. சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு தேவனின் கட்டளையை மீறி கனியை சாப்பிட்ட ஆதமை, சாத்தான், தேவன் அவனுக்கு அணிவித்திருந்த மகிமையின் ஆடையை உரிந்து நிர்வாணியாக விட்டுச்சென்றான். அந்த நிர்வாணத்தை மறைக்க அவன் உடுத்திய அத்தியிலைகளானது அவனது நிர்வாணத்தை முழுமையாக மறைக்க முடியவில்லை எனவே "தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவி ஏவாளுக்கும் தோல் உடைகளை உண்டாக்கி உடுத்தினார்" (அதி 3:21) என வேதம் சொல்கிறது.
.
தோல் வேண்டுமென்றல் ஒரு உயிர் கொல்லப்பட வேண்டும். அகவே அங்குதான் முதல் பலி உண்டானது. ஆதாமின் பாவத்துக்காக ஒரு பாவமறியா ஜீவன் அங்கு கொல்லப்பட்டது. மேலும் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்ற இறைவனின் நியமணத்துக்கு இணங்க எந்தெந்த பாவங்களுக்கு என்னென்ன பலிகளை செலுத்தவேண்டும் என்று போஜனபலி, பானபலி, சமாதான பலி, பாவ நிவாரணபலி, குற்றநிவாரண பலி, சர்வாங்க தகனபலி என்று பல்வேறு பலிகளை இறைவன் லேவியராகம புத்தகம் 1ம் அதிகாரத்தில் இருந்து சொல்லியிருந்தாலும், பலியிடுதல் என்பது தேவனின் மன விருப்பத்துக்கு ஏற்றதல்ல என்றும், எதோ ஒரு நிர்பந்தத்தால்தான் அதை செய்ய கட்டளை இட்டார் என்பதையும் தனது பல்வேறு தீர்க்கதரிசிகள் முலம் கர்த்தர் பேசிய கீழ்காணும் வசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

  • பலியை அல்ல இரக்கத்தையே விரும்பிகிறேன், தகன பலிகளை காட்டிலும் தேவனை அறிகிர அறிவையும் விரும்புகிறேன் (ஓசி:6)
  • உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா:1:11)
  • நான் உங்கள் பிதாக்களை எகிப்த்து தேசத்தில் இருந்து அழைத்துவந்த நாளிலே தகன பலிகளை குறித்தும் மாற்ற பலிகளை குறித்தும் நான் பேசியதையும் கட்டளை இட்டதையும் பார்க்கிலும் என் வார்த்தைக்கு செவிகொடுங்கள் அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்(எரே:7:22)
  • கர்த்தர் சத்தத்துக்கு கீழ்படிதலை பார்க்கிலும் சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்கு பிரியமாயிருக்குமோ? பலியை பார்க்கிலும் கீழ்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தை பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் (I சாமு:15:22)

எனவே இயேசுவானவர் மனிதனின் எல்லா பாவத்துக்கும் ஒரே தரமாக தனது இரத்தத்தை சிந்தும்வரையுள்ள இடைப்பட்ட காலக்கட்டத்தில் பவ நிவர்த்தி செய்வதற்காக இறைவனால் கட்டளையிடப்பட்டதே இந்த பலிகளும் இரத்தம் சிந்துதல் சம்பத்தப்பட்டவைகளும். ஆட்டுக்கடாக்க்களின் இரத்தத்தை பார்க்கிலும் வல்லமை உள்ள இயேசுவின் இரத்தம் மூலம் பலிகளும், தனது மாமிசத்தை நொறுக்கக்கொடுத்ததின் மூலம் மாமிசம் சம்பந்தப்பட்ட தீட்டுப்படுதல், விருத்தசேதனம் பண்ணுதல் போன்ற சடங்குகளும் ஒரு முடிவுக்கு வந்தது.


அகவே நியாயபிரமாணத்தில் இரண்டு பகுதியான கர்த்தரின் வாசஸ்தலம், மற்றும் பலியிடுதல் இரண்டும் இயேசுவின் மரணம் மூலம் முடிவடைந்தது என்பதை இயேசுவின் வார்த்தை மற்றும் தீர்க்க்கதரிசிகளின் வார்த்தைகள் மூலமே நாம் பார்த்துவிட்டோம். ஆனால் கர்த்தரோ, இயேசு கிறிஸ்துவோ எந்த இடத்திலும் எனது கட்டளைகளையும், நியாயங்களையும் கை கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கூறவே இல்லை. அப்படி எங்கும் வேதத்தில் இருந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள்.


நாம் இந்த பூமியில் பிறந்ததே பாவம்:
இரண்டாவதாக நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் பிறக்கும்போதே பாவத்தில்தான் பிறக்கிறோம் "என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்" என்று சங்கீதம் சொல்கிறது. எப்படியெனில் புசிக்க கூடாது என்று இறைவன் விலக்கிய கனியை புசித்த பிறகுதான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிந்து முதல் குழந்தையே பிறந்தது. எனவே முதல் குழந்தை பிறந்ததே பாவம்தான். அதாவது பிறக்க தகுதியில்லாத நாம் பாவத்தின் காரணமாக பூமியில் பிறந்து விட்டோம். அந்த பிறந்த பாவத்தை மன்னிக்க ஒருவர் இறந்தே ஆக வேண்டும் அது இயேசுவின் மூலம் நிறைவேறியது.
.

எனவே ஒருவன் நீதிமானாக வேண்டுமென்றால் முதல் முதலில் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு தான் பூமியில் பிறந்த பாவம் மற்றும் பிறந்ததில் இருந்து அந்த நாள் வரை செய்த எல்லா பாவங்களும் மன்னிக்கப்படு நீதிமானாக வேண்டும். அதன் பிறகுதான் இரண்டாவது ஸ்டெப் போக முடியும்.

Friday, March 28, 2008

தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும்

தன் அயலானுடைய மனைவியை தீட்டுப் படுத்தமலும்:

தனக்கு என்னதான் என்னதான் அழகான ஒரு மனைவி கிடைத்திருந்தாலும் பிறரின் மனைவியின் மேல் ஒரு ஈர்ப்பு வருவது அனேகமாக எல்லோருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். இது மனித இயல்பு என்று சொல்லுமளவுக்கு இன்று வயது வரம்பின்றி யார் என்று பார்க்காமல் மோகம் கொள்ளும் அளவுக்கு இந்த பாவம் வளர்ந்துள்ளது. பிசாசின் இந்த கண்ணியில் அநேகர் சிக்குண்டு விடுபட முடியாமல் தவிக்கின்றனர். ஏன் கிறிஸ்த்தவ பாஸ்டர்கள், பாதிரியார்கள்கூட இதில் விதி விலக்கல்ல. இதற்க்கு முக்கிய காரணம் இயேசு நியாயபிரமாணத்தை நிறைவேற்றி விட்டார் நாம் எதையும் கைக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று போதிக்கும் கூட்டத்தால் இப்படி கர்த்தரின் வார்த்தைகள் மேல் விசுவாசிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது


பிறன் மனைவியை இச்சிக்க கூடாது என்பதை வேதம் பல இடங்களில் மிகவும் கண்டிப்பாக சொல்கிறது "பிறன் மனைவியை தொடுபவன் எவனும் ஆக்கினை தீர்ப்புக்கு தப்பான்" என்று நீதி மொழிகள் சொல்கிறது. "பிறன் மனைவியோடே சயனித்து அவளால் உன்னை தீடுப்படுத்தாதே" என்று கர்த்தரின் நீதி நியாயகளில் சொல்லப்பட்டுள்ளது. "பிறன் மனைவியை இச்சியாது இருப்பாயாக" என்று பத்து கட்டளைகளில் கடைசி கட்டளை சொல்கிறது நமதாண்டவர் இயேசு கூட "ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்த்தவன் எவனும் அவளோடு விபச்சாரம் செய்த பாவத்துக்கு உள்ளகிறான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவத்தில் மட்டுலமல்ல பல இந்து புராணங்களில் கூட பிறன் மனைவியை இச்சித்து அழிந்து போன அனேக மதிகெட்டவர்களை பார்க்க முடியும்

ஆம் அன்பானவர்களே, மனிதனுக்கு கெடுதல்களை கொண்டுவரும் செயல்களில் அதிகம் கெடுதலை கொண்டு வருவது பிறன் மனைவியை இச்சித்தல் ஆகும். நாம் அதை நியாயப்படுத்த அனேக காரணங்களை சொல்ல முடியும். என்னதான் காரணங்கள் இருந்தாலும் கணவன் உயிரோடு இருக்கும் போது அவன் மனைவியுடன் தகாத உறவு கொள்பவன் நரக அக்கினிக்கு தப்புவது மிக மிக கடினம். அகவே அதிலிருந்து உடனடியாக விடுபட வேண்டும்.



Edit this page (if you have permission) | Google Docs -- Web word processing, presentations and spreadsheets.